#Breaking: 50 அடி உள்வாங்கியது திருச்செந்தூர் கடல்; ஆபத்தினை உணராத பக்தர்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!



Thoothukudi Thiruchendur Temple Sea 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில், இன்று திடீரென கடல் நீர்மட்டம் 50 அடி அளவில் உள்வாங்கியது. 

கடலுக்குள் சென்ற சுற்றுலாப்பயணிகள்:

இதனால் கடற்கரையோரம் இருந்த பாறைகள் அனைத்தும் வெளியே தென்பட்டன. மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், விபரீதம் தெரியாமல் கடலுக்குள் இறங்கினர்.

எச்சரித்து அனுப்பிய காவல்துறை:

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பக்தர்கள் அனைவரையும் கடற்கரை பகுதியில் இருந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடல் பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு நடந்தது. அப்போது அழைக்க 1 அடி முதல் 10 அடி வரை உயர்ந்தது நடந்தது குறிப்பிடத்தக்கது.