தமிழகத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் "ஸ்நேக் ராஜ்" கைது - ஈரோடு காவல்துறை அதிரடி.!

தமிழகத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் "ஸ்நேக் ராஜ்" கைது - ஈரோடு காவல்துறை அதிரடி.!



Thoothukudi Pudukkottai Thief Nagaraj Arrested by Erode Police at Pondicherry

15 க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு வழக்குடன் தலைமறைவாக இருந்த நாகராஜ் ஈரோடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரின் மகன் நாகராஜ் (வயது 24). நாகராஜின் மீது தூத்துக்குடி, ஈரோடு மற்றும் புதுக்கோட்டை உட்பட பல ஊர்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் 15 க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. 

இவன் காவல் துறையினருக்கு டிமிக்கி கொடுத்து வந்த காரணத்தால், தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தான். கடந்த வாரம் ஈரோடு நகரில் நடைபெற்ற 5 சவரன் நகை வழிப்பறி நாகராஜால் செயல்படுத்தப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, அவனின் செல்போன் நம்பர் வைத்து அதிகாரிகள் அவனை கண்காணித்தனர். 

Thoothukudi

அப்போது, நாகராஜ் புதுச்சேரியில் உள்ள ஆம்பூர் சாலையில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியிருப்பது உறுதியாகவே, புதுச்சேரிக்கு சென்ற ஈரோடு தனிப்படை காவல் துறையினர், ஓதியஞ்சோலை காவல் துறையினர் உதவியுடன் நாகராஜை அதிரடியாக கைது செய்தனர். அவன் ஈரோட்டு அழைத்து வரப்பட்டுள்ளான். விசாரணை நடந்து வருகிறது.