திடீரென சடன் பிரேக்; அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.!

திடீரென சடன் பிரேக்; அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.!



Thiruvallur Sembarambakkam National Highway Traffic

Image (File Pic)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சரக்கு வாகன ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். 

அப்போது, அந்த வாகனத்திற்கு பின்னால் என அடுத்தடுத்து வந்த வாகனங்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 5 வாகனங்கள் சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.