திருவள்ளுவரிடமிருந்து பூணூலை தூக்கி எரிந்தவர் கருணாநிதி.! ஆனால்.. திருமாவளவன் ஆவேசம்.!

திருவள்ளுவரிடமிருந்து பூணூலை தூக்கி எரிந்தவர் கருணாநிதி.! ஆனால்.. திருமாவளவன் ஆவேசம்.!



thirumavalavan-election-canvas

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

thirumavalavan

அங்கு அவர் பேசுகையில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாததால் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது. பாஜகவை வீழ்த்தத்தான் திமுக கூட்டணி உருவாகி உள்ளது. ஆகவே, பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திருவள்ளுவருக்கு பூணூல் போட்ட படம் தான் ஆரம்பத்தில் பயன்பாட்டில் இருந்தது. அந்த பூணூலை அகற்றி புது வடிவம் தந்தவர் கருணாநிதி. ஆனால் பாஜகவினர் திருவள்ளுவருக்கு மீண்டும் காவி அடித்து பூணூல் போடுகிறார்கள் என தெரிவித்தார்.