மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்!.. புகையிலை உபயோகித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்!.. புகையிலை உபயோகித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!



the-student-jumped-from-the-third-floor-of-the-college

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே இருக்கும் வில்லா பாளையத்தில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மகன் அரவிந்த் சபரி (18). இவர் அரவக்குறிச்சி அருகே இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் வருடம் படித்து வருகிறார். 

நேற்று அரவிந்த் சபரி, செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, அரவிந்த் சபரி கல்லூரியில் புகையிலை பொருட்கள் உபயோகபடுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே அரவிந்த் சபரியிடம் பெற்றோரை அழைத்து வருமாறு கல்லூரியில் கூறியுள்ளனர். 

பெற்றோரை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதால், அரவிந்த் சபரி, கல்லூரியின் மூன்றாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். இதை கண்ட சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.