மாமியாருக்கு பாலியல் தொல்லை அளித்த மருமகன்.... பொறுக்க முடியாமல் மாமியாரும் மனைவியும் செய்த காரியம்..!!

மாமியாருக்கு பாலியல் தொல்லை அளித்த மருமகன்.... பொறுக்க முடியாமல் மாமியாரும் மனைவியும் செய்த காரியம்..!!



The son-in-law sexually harassed the mother-in-law.

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மருமகன் மீது மிளகாய் பொடி கலந்து சுடுதண்ணி ஊற்றியதில், பலத்த காயமடைந்த மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருவெம்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில் மனைவி டயானா மேரியுடன் (22) வசித்து வந்தார். செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் செல்வராஜ் குடித்துவிட்டு வந்து மாமியாரிடம் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனம் நொந்து போன இன்னாசி அம்மாளும், மகள் டயானா மேரியும், சேர்ந்து கடந்த 5 ஆம் தேதி சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றியுள்ளனர். 

இதில் செல்வராஜ உடல் முழுவதும் வெந்து  பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை பறிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டயானா மேரியையும் இன்னாசி அம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது செல்வராஜ் இறந்ததால், இந்த வழக்கை திருவெறும்பூர் காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.