காருக்குள் இருந்த மர்ம மூட்டை.. திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

காருக்குள் இருந்த மர்ம மூட்டை.. திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!



The mysterious package inside the car.A shock awaited the police who opened it..!

கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததுள்ளது.

மேலும் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அந்த காரின் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் தலை தெறிக்க ஓடி தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து திறந்து பார்த்தபோது காருக்குள் ஏராளமான மர்ம மூட்டைகள் இருந்துள்ளன.

Drug trafficking

பின்னர் அந்த மர்ம மூட்டைகளை போலீசார் பிரித்துப் பார்த்தபோது அதில் குட்கா, கூல் லிப்  போன்ற போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த போதைப் பொருட்கள் அனைத்தும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதைப் பொருட்கள் இருந்த காரை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.