முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து..! மகன் இறந்த தகவலை டிவியில் பார்த்து மயங்கி விழுந்த தாயார்.!

முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து..! மகன் இறந்த தகவலை டிவியில் பார்த்து மயங்கி விழுந்த தாயார்.!



the-mother-who-fainted-after-seeing-the-news-of-her-son

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் விங் கமாண்டர் உயிரிழந்த செய்தியை டிவியில் பார்த்த அவர் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலையில் அவரின் மொத்த குடும்பமும் துயரத்தில் மூழ்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் வருண் சிங் 80 சதவீத படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற  எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பி.எஸ். சவுகான். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக, விபத்து நடந்த முந்தைய நாள் இரவு தொலைபேசியில் பேசியுள்ளார்.  விபத்தில் மறைந்த விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானுக்கு மனைவி, 12 வயதில் மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

accident

இந்தநிலையில் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து செய்தியை, பி.எஸ்.சவுகானின் மாமனார் தொலைபேசி மூலம் சவுகானின் தாயிடம், தெரிவித்து டிவியை பார்க்குமாறு கூறியிருக்கிறார். டிவியை பார்த்த அவர், தனது மகன் சென்ற ஹெலிகாப்டர் நொருங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாயார் அப்படியே கீழே விழுந்து மயங்கினார்.