மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொத்தனார்: கத்தியுடன் காவல் நிலையத்திற்கு சென்றதால் பரபரப்பு..!

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொத்தனார்: கத்தியுடன் காவல் நிலையத்திற்கு சென்றதால் பரபரப்பு..!


The mason who stabbed his wife to death

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் கம்மாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஆவினங்குடியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் நாகராஜன் ( 32). இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். நாகராஜின் மனைவி ராஜலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது.

நாகராஜ் தற்போது, ராஜலட்சுமியின் சொந்த ஊரான விருத்தாசலைத்த அடுத்த கம்மாபுரத்தில் உள்ள வெள்ளாளர் தெருவில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ராஜலட்சுமி சமையல் செய்யும் தற்காலிக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை. இதன் காரணமாக, தம்பதியினருக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மீண்டும் இதுகுறித்து  தம்பதியினரிடையே எழுந்த விவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், ராஜலட்சுமியை அவரது தலை மற்றும் பின்னங் கழுத்து பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை யடுத்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன், கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜன் சரண் அடைந்தார்.

நாகராஜின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட காவல்துறயினர், அவரை கைது செய்தனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து, நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.