நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி இழுத்துச் சென்ற கொடூரம்... இளைஞர் கைது...!!

நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி இழுத்துச் சென்ற கொடூரம்... இளைஞர் கைது...!!



The brutality of the girl who went to walking training and dragged her with a stick... Youth arrested...

நடைப்பயிற்சி செய்ய வந்த பெண்ணை கட்டையால் தாக்கி பைக் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபர், அந்தப் பெண்ணைத் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

திருச்சி வ.உ.சி. சாலைப் பகுதியை சேர்ந்தவர் சீதா லட்சுமி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப்‌ வேலை செய்து வருகிறார். வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். 

கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற இளைஞர் ஒருவர், தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசியையின் தலையின் பின்பக்கம் தாக்கியுள்ளார். இதில், மயங்கி சீதாலட்சுமி கீழே விழுந்தவுடன் அவர் கால்களைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று அவரிடம் இருந்து பைக் மற்றும் செல்போன், இரண்டையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செந்தில் குமார் (32) என்று ‌தெரியவந்தது. அவர் தற்போது காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். மேலும், திருச்சி கோட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் பைக்கை செந்தில் குமார் விற்க முயன்றபோது, போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

போலீசார், அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயற்சி செய்ததில் தவறி விழுந்து, காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், நடைப்பயிற்சிக்கு வந்த பெண்ணை தாக்கி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. கஞ்சா போதையில் இளைஞர் செந்தில் குமார் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.