பரமக்குடி கோர்ட்டில் ஆஜராக வந்தவரை அடித்து கொலை செய்த கொடூர சம்பவம்...!!

பரமக்குடி கோர்ட்டில் ஆஜராக வந்தவரை அடித்து கொலை செய்த கொடூர சம்பவம்...!!



The brutal incident of beating to death the person who appeared in the Paramakudi court...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ். இவர் சென்னை மேட்டுக்குப்பம் பகுதியில் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று தேவராஜ் கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராக பரமக்குடி வந்துள்ளார். கோர்ட்டில் ஆஜரான அவர் எம்ஜிஆர் நகரில் இருக்கும் அவரது நண்பர் கோபி வீட்டிற்கு சென்றுள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேவராஜ் உறவினரான பன்னீர் என்பவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். பணம் வாங்கிய பன்னீர் அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். எனவே பன்னீரின் காரை தேவராஜ் சென்னைக்கு எடுத்துச் சென்றார். 

எனவே பன்னீர், தேவராஜிடம் அடிக்கடி காரை திருப்பித் தருமாறு கேட்டு வந்தார். ஆனால் தேவராஜ் காரை தர மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோட்டில் ஆஜராக வந்த தேவராஜை பரமக்குடி எம்ஜிஆர் நகரில் இருக்கும் பன்னீரின் உறவினர் முனீஸ்வரி வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளனர். 

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தகராறில் பன்னீர் அவரது உறவினர் தமிழ், வினித், ஆகியோர் தேவராஜை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பரமக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருக்கும் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.