சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி.... நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த காதலன்...



The boyfriend gang-raped the girl along with his friends by promising to marry her...

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு(19). ஆட்டோ ஓட்டுனரான இவரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

சிம்பு இந்த விஷயத்தை தனது நண்பர்களான சிவா(21), செல்வம்(19) ஆகியோரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நண்பர்களும் சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளனர். முதலில் அதிர்ச்சியடைந்த சிம்பு பின்னர் சம்மதித்துள்ளார். நேற்று முன்தினம் தனியாக சந்திக்கலாம் என சொல்லி சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி சாலையில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் சென்றுள்ளார்.

அங்கு சிம்புவின் நண்பர்களும் இருந்துள்ளனர்.  சிறுமியை மிரட்டி மூவரும் வலுக்காட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர். நடந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூன்று பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.