#தஞ்சை ; லிப்ட் கொடுத்த பக்கத்துவீட்டுக்காரர்., பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்.!



Thanjavur women sexually assaulting by neighborhood

தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி அருகே அமைந்துள்ள கொசுவபட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு ஷர்மிளா என்ற 22 வயது மகள் இருந்துள்ளார். ஷர்மிளா சென்னையில் இருக்கும் கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். 

Rape

தீபாவளிக்கு முன் சர்மிளா துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காக செங்கிப்பட்டிக்கு அருகில் இருக்கும் தச்சன்குறிச்சிக்கு வந்துள்ளார். தொடர்ந்து விடுமுறையில் இருந்த அவர் தச்சங்குறிச்சியில் இருக்கும் தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்துள்ளார். நாட்டாணி பகுதியில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு சென்றுள்ளார்.  

அதன்பின் ஷர்மிளாவை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வர வீட்டிற்கு அருகில் இருந்த 30 வயதான கருப்பசாமி என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதித்து அழைத்து வந்த நிலையில் நீண்ட நேரமாகியும் இருவரும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது இருவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது

Rape

நீண்ட நேரமானதால் பதற்றமடைந்த உறவினர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் ஷர்மிளாவின் உடல் சென்னம்பட்டி பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.