பதறி கதறிய பெற்றோர்... 7 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு... காவல்துறை தீவிர விசாரணை.!

பதறி கதறிய பெற்றோர்... 7 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு... காவல்துறை தீவிர விசாரணை.!



terror-in-coimbatore-seven-year-old-boy-recovered-with

கோயமுத்தூரில் அசாமை சார்ந்த ஏழு வயது சிறுவன் காயங்களுடன் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி ஹைருன் நிஷா  மற்றும் மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூர் வந்தார். இதனைத் தொடர்ந்து சின்ன கலங்களில் உள்ள முத்து என்பவரது நூற்பாலையில்  ஜாகிர் உசேனுக்கு வேலை கிடைத்தது. அவர் அந்த தொழிற்சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். அவருடைய மனைவியும் கணவருடன் வேலைக்கு சென்று வந்தார்.

tamilnadu
இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றபோது மகன் இஸ்லாம் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறான்.  இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில்  காயங்களுடன்  மயங்கிய நிலையில் காணப்பட்டிருக்கிறான் சிறுவன். இதனைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் சிறுவனை  சூலூர் அரசு மருத்துவமனைக்கு  தூக்கிச் சென்றுள்ளனர்.

tamilnadu
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன்  பணியனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. சம்பவத்தில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.