அச்சச்சோ.. மழையால் பரவும் எலி காய்ச்சல்.. 11 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு சிகிச்சை.!

அச்சச்சோ.. மழையால் பரவும் எலி காய்ச்சல்.. 11 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு சிகிச்சை.!


Tenkasi Ambasamuthram 5 affected Rat Fever

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்கிறது. இந்நிலையில், கடையம் வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. 

இவர்கள் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என எண்ணி மருத்துவமனைக்கு சென்று உடல்நலக்குறைவால் அனுமதியாகியுள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்தபோது எலிக்காய்ச்சல் உறுதியானது. 

இதில், 11 வயது சிறுமியும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவரின் உடல்நிலை மோசமான காரணத்தால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். பிற 4 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.