இன்று முதல் துவங்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு.! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா.?

இன்று முதல் துவங்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு.! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா.?



teachers exam

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று முதல் துவங்குகிறது. இந்தநிலையில், தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு  12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக்கூடாது என ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ளது. தேர்வுகள் காலை 9 மணி பிற்பகல் 2 மணி என இரு வேளைகளில் நடைபெறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுதும் தேர்வர்கள் 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச்சீட்டுடன். போட்டோ மற்றும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையையும்  கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையத்திற்கு செல்போன், மைக்ரோ போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். தேர்வு மையத்தில் எவ்வித முறைகேடும் ஏற்படாமல் இருக்க பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.