42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
இந்த செயல்பாடுகளுக்கு 50 % நபர்களுடன் அனுமதி - தமிழ்நாடு அரசு உத்தரவு.. என்னென்னெ விதிமுறைகள்?.!
![Tamilnadu Govt Announce Lockdown Measure Till 31 January 2022](https://cdn.tamilspark.com/large/large_lockdown-chennai-43561-1200x630.jpg)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 1, 2021 முதல் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தியுள்ளது. இந்த உத்தரவின் மூலமாக, சில கட்டுப்பாடுகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டு நெறிமுறையுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்படுகிறது.
வழிபாட்டு தளங்களில் நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல் பின்பற்றப்பட வேண்டும். உணவகம், அடுமனை, தங்கும் விடுதிகளில் 50 % வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 % வடிக்கையாளருடன் செயல்படலாம். திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
துக்க நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சி நடந்த, துக்கம் அனுசரிக்க அனுமதி வழங்கப்படும். துணிக்கடை மற்றும் நகைக்கடையில் 50 % வாடிக்கையாளருடன் ஒரே நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
திரையரங்கம், கேளிக்கை விடுதி, உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு மையங்களில் 50 % வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படும். பேருந்துகளில் பயணம் செய்வோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.