19 லட்சம் பேருக்கு அரசு வேலை! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

19 லட்சம் பேருக்கு அரசு வேலை! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!



Tamilnadu government job for 19 lakhs people

அரசு வேலை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! நம்மில் பெரும்பாலானோரின் ஆசை, எப்படியாவது ஒரு அரசு வேளைக்கு செல்லவேண்டும் என்பதுதான். ஆனால் எந்த எந்த துறைக்கு எப்போது வேலைவாய்ப்பு வருகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இனி அரசு சம்மந்தமான வேலைவாய்ப்பு செய்துகளை உடனே தெரிந்துகொள்ள தமிழ் ஸ்பார்க் பக்கத்தினை உடனே பின்பற்றுங்கள்.

தமிழகத்தில் காதி துறையில் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில் காதி தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 2018-19-ஆம் ஆண்டின் போது காதி சீரமைப்பு, மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தால் 62 விற்பனை மையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சீரமைப்பால் கைவினை கலைஞர்கள் நேரடியாக பயன்பெறாவிட்டாலும், அதிகப்படியான விற்பனையால் மறைமுகமாக பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் காதி கிராமத் தொழில்கள் துறையில் இருந்து தமிழகத்தில் சுமார் 19 லட்சம் பேருக்கும், பாண்டிச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.