தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.! மருத்துவமனை வெளியிட்ட தகவல்.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.! மருத்துவமனை வெளியிட்ட தகவல்.!


tamilnadu-cm-admitted-in-hospital

உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.