உழைத்து முன்னேறிய வடமாநில இளைஞர்.. காழ்ப்புணர்ச்சியால் அடித்து மருத்துவமனையில் படுக்கவைத்த தமிழர்கள்..!!

உழைத்து முன்னேறிய வடமாநில இளைஞர்.. காழ்ப்புணர்ச்சியால் அடித்து மருத்துவமனையில் படுக்கவைத்த தமிழர்கள்..!!



Tamilans attacked a North Indian boy

ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் சந்தோஷ் (வயது 24). காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஆரனேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பல ஆண்டுகளாக கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தவர், சமீபத்தில் உணவகம் ஒன்றை தொடங்கி நடத்திவந்துள்ளார். 

tamilnadu

இப்பகுதியில் உணவகம் வைத்து நடத்திவந்த மற்றொரு இளைஞர் தனது ஆதரவு நபருடன் வடமாநில இளைஞர் நடத்திவந்த புதிய உணவகத்திற்கு சென்று "உன்னால் எனது வியாபாரம் பாதிக்கப்படுகிறது" என்று வாக்குவாதம் செய்து மிரட்டி இருக்கிறார். 

மேலும் கடையை திறக்ககூடாது என்று எச்சரித்ததால் சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவே, கடையில் இருந்த கரண்டி உட்பட பாத்திரங்களை எடுத்து அவரின் மீது பலத்த தாக்குதல் நடத்தியுள்ளனர். 

tamilnadu

இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.