இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக்கழகம்! தமிழக அரசின் அதிரடி முடிவு!

இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக்கழகம்! தமிழக அரசின் அதிரடி முடிவு!



tamilandu ovt split Anna University

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கவும் புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.

Anna university

அந்தக் கடிதத்தில், 'சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.  தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.  அத்துடன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு உறுதி அளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்து முடிவு செய்யும் என கூறப்படுகிறது.