தமிழகத்தில் இறுதிகட்டத்தை நெருங்குகிறதா கொரோனா!! தொடர்ந்து குறைந்துவரும் பாதிப்பு எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இறுதிகட்டத்தை நெருங்குகிறதா கொரோனா!! தொடர்ந்து குறைந்துவரும் பாதிப்பு எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்


Tamil Nadu corona latest update and count status

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 565 ஆக பதிவாகியுள்ளது.

corona

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,52,521 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,07,173 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று மட்டும் 25 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,440 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று மேலும் புதிதாக 2,347 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனூலாம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,22,686 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குரைந்துவருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து 25-ஆவது நாளாக 1,000-க்கும் குறைவாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோன பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருவது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.