சப் இன்ஸ்பெக்டருக்கு மன உளைச்சல்! கதவை சாத்திக்கொண்டு அவர் எடுத்த விபரீத முடிவு! பதறிப்போன மனைவி!

சப் இன்ஸ்பெக்டருக்கு மன உளைச்சல்! கதவை சாத்திக்கொண்டு அவர் எடுத்த விபரீத முடிவு! பதறிப்போன மனைவி!



sub inspector got suicide


சென்னை வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சேகர். 48 வயது நிரம்பிய இவர், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று சப் இன்ஸ்பெக்டரின் மனைவி தமிழ்ச்செல்வி பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்[பொது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கணவர் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார் தமிழ்ச்செல்வி.

அப்போது வீட்டின் படுக்கை அறையில், சேகர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளார். அவருக்கு அருகில் கத்தி ஒன்று கிடந்தது. இதனையடுத்து சேகர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொமாண்டது தெரியவந்தது.

suicide

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தற்கொலை செய்த சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மன உளைச்சல் காரணமாக சேகர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.