இலங்கையில் இருந்து பறந்துவந்து தமிழனை கரம்பிடித்த பெண்மணி.. சட்டசிக்கலை தீர்க்க எஸ்.பி ஆபிஸில் மனு.!

இலங்கையில் இருந்து பறந்துவந்து தமிழனை கரம்பிடித்த பெண்மணி.. சட்டசிக்கலை தீர்க்க எஸ்.பி ஆபிஸில் மனு.!



SriLanka Girl Married Tamilnadu Salem Man Getting After Tourist Visa

முகநூல் காதலனை கடல்தாண்டி வந்து கரம்பிடித்த இலங்கை பெண்மணி, காதலருடன் தமிழகத்தில் வாழ்வதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டுகோள் வைத்து சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் வசித்து வருபவர் சரவணன். இலங்கையை சேர்ந்த பெண்மணி நிஷாந்தினி. இவர்கள் இருவருக்கும் இடையே முகநூலில் கடந்த வருடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இருவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

Salem

காதலனை கரம்பிடிக்க முடிவெடுத்த நிஷாந்தினி, கடந்த 2 வாரத்திற்கு முன்னதாக சுற்றுலா விசா பெற்று சேலம் வந்துள்ளார். இருவரும் ஓமலூர் பஞ்சுகாளிபட்டியில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணமும் செய்துள்ளனர்.

Salem

திருமணத்தை பதிவு செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது, அதில் சட்ட சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் காதல் ஜோடி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்ஷேபமில்லா சான்றிதழ் கேட்டு மனு வழங்கியுள்ளனர்.