புதுக்கோட்டையில் தாய் - தந்தையை வெட்டி கொலை செய்த மகன்.! அதிர்ச்சி காரணம்.!

புதுக்கோட்டையில் தாய் - தந்தையை வெட்டி கொலை செய்த மகன்.! அதிர்ச்சி காரணம்.!



son killed parrents in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி-வள்ளி தம்பதி. 60 வயது நிரம்பிய ரெங்கசாமி நாவலிங்ககாடு பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வந்துள்ளார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ரெங்கசாமியின் மகளுக்கு திருமணமாகி விட்டது. அவரது இளைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் பாலசுந்தர் கேட்டரிங் படித்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் பிரமை பிடித்தது போல வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்.

பாலசுந்தரின் நடவடிக்கையை பார்த்து அக்கம்பக்கத்தினர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தனது மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இந்தநிலையில், பாலசுந்தர் சமீப காலமாக தனுக்கு திருமணம் செய்துவைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ரெங்கசாமியின் வீட்டில் வழக்கமாக பால் கறந்து செல்லும் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பாலசுந்தரிடம் பால் கறக்க வேண்டும் உன்னுடைய அப்பா, அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனையடுத்து பால்காரர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாலசுந்தர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், தனது பெற்றோரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பாலசுந்தரிடம் விசாரணை மேற்கொண்டபோது தனது தாய் தந்தையரை கொடூரமாக கழுத்தை அறுத்தும் அடித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.