சூடு காட்டில் புதைக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தலையை எடுத்து சென்ற மர்ம நபர்கள்... ஏன், எதற்கு.? அதிர்ச்சி சம்பவம்...

சூடு காட்டில் புதைக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தலையை எடுத்து சென்ற மர்ம நபர்கள்... ஏன், எதற்கு.? அதிர்ச்சி சம்பவம்...



Some members took died children head in sithiravaadi

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு கிருத்திகா (12) என்ற மகள் உள்ளார். கிருத்திகா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார்.

அங்கு பழுதடைந்த மின் விளக்கை மாற்றுவதற்காக மின் கம்பத்தின் மீது ஏறி வேலை பார்த்துள்ளார் மின் ஊழியர் கலைச்செல்வன். அப்போது எதிர்பாராத விதமாக சேதம் அடைந்திருந்த மின்கம்பம் முறிந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது. 

அதில் படுகாயமடைந்த கிருத்திகாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர் கிருத்திகாவின் உடல் உடற்கூறு ஆய்விற்கு பிறகு சித்திரவாடி சூடு காட்டில் புதைக்கப்பட்டது.

12 years old girl

இந்நிலையில் நேற்று காலை கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மஞ்சள், குங்குமம் மற்றும் மூடி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக இது குறித்து கிருத்திகாவின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.  இதையடுத்து அவர்கள் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.

அப்போது கிருத்திகாவின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கிருத்திகாவின் உடலை மட்டும் கைப்பற்றிய போலீசார் மறு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருத்திகாவின் தலையை துண்டித்து எடுத்து சென்றது யார் , ஏன் இப்படி செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.