ரவுடி பேபியை தொடர்ந்து, அடுத்த பிரபலத்திற்கு தயாராகிறது சிறைக்கதவு?.. குவியும் கண்டனங்கள்.!

ரவுடி பேபியை தொடர்ந்து, அடுத்த பிரபலத்திற்கு தயாராகிறது சிறைக்கதவு?.. குவியும் கண்டனங்கள்.!



social-media-netizens-request-to-tn-police-arrest-trich

டிக் டாக்கில் கணக்கு தொடங்கி, அதன் மறைவுக்கு பின்னர் டிக் டாக்கில் பெற்ற புகழை வைத்து பிரபலமான ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் பெண் மற்றும் அவரின் குழந்தையை ஆபாசமாக பேசிய புகாரில் குண்டரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சமூக வலைதளத்தில் பிரபலமாக நினைக்கும் இவரைப்போன்ற பலரும் சமூக சீர்கேடான விஷயங்களை கைகளில் எடுத்துள்ள காரணத்தால் அவர்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, அடிதடி என நடந்து வருகிறது. இதில், பல பார்வையாளர்களை கவர வேண்டும் என்றே சித்தரித்தும் எடுக்கப்படுகிறது. 

Social media

இந்த நிலையில், திருச்சி சாதனா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சூர்யாவின் இடத்தை தக்க வைக்க நினைத்து செயலாற்றி வருகிறார். இதனால் சாதனாவின் வீடியோவுக்கு பலதரப்பில் கண்டனம் குவிந்து வரும் நிலையில், முதல் இரட்டை அர்த்த வசனங்கள், அரைகுறை கவர்ச்சி என வீடியோ வைரலாகியும் வருகிறது.