பிரேக்கிங்: மாபெரும் சோகம், 6 பேர் பலி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோக சம்பவம்.!

பிரேக்கிங்: மாபெரும் சோகம், 6 பேர் பலி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோக சம்பவம்.!



six-members-died-while-cleaning-water-tank

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்பவரது வீட்டில் கழிவு நீர் சுத்தம் செய்ய ஆட்களை வேலைக்கு வரச் சொல்லியுள்ளார். அந்த தொட்டியானது நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த ஆறு பேர் அந்த தொட்டியை சுத்தம் செய்ய அதன் மூடியை திறந்து உள்ளார்கள்.

அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக உள்ளிருந்து வெளியே வந்த விஷவாயு அவர்களை தாக்கியது இதில் சம்பவ இடத்தில் 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.