#Breaking: பள்ளி மாணவர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்து விபத்து; 7 ம் வகுப்பு மாணவன் பலி, 20 பேர் படுகாயம்.! சிவகங்கையில் அதிர்ச்சி.!

#Breaking: பள்ளி மாணவர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்து விபத்து; 7 ம் வகுப்பு மாணவன் பலி, 20 பேர் படுகாயம்.! சிவகங்கையில் அதிர்ச்சி.!



Sivaganga School Van Accident 1 Died  

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர், சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியாகினர். 

வேம்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளி வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முனைக்குளம் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் ஹரி வேலன் என்ற மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, 20 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வாகனத்தில் இருந்த ஆசிரியர் ஊருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். 

Sivaganga

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், ஏரிக்கரை வழியே வாகனம் சென்றபோது, வேனின் டயர் பதிந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

வேனுக்கு இன்று புதிய ஓட்டுநர் வந்ததால், அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஹரிவேலன் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்தது உறுதி செய்யபட்டுள்ளது.