பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அக்கா கணவர்.. போலீசார் தீவிர விசாரணை!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அக்கா கணவர்.. போலீசார் தீவிர விசாரணை!



Sister husband raped sister in Chennai

பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அவரது அக்கா கணவரை போலீசார் கைது செய்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் குமரன் காலணியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகமது அல்தாப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராணி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

chennai

இளைய மகள் விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி இரவு  10ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தாய் எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், மகளிடம் விசாரித்ததில் தனது அக்கா கணவர் முகமது அல்தாப் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பலத்காரம் செய்ததாகவும், இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாக கூறியுள்ளார்.

chennai​​​​​

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் முகமது அல்தாபை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.