அதிர்ச்சி சம்பவம்.. குடும்பத்துடன் தீபாவளி புத்தாடை வாங்க சென்ற பெண் விபத்தில் சிக்கி பலி.. கதறும் உறவினர்கள்.!

அதிர்ச்சி சம்பவம்.. குடும்பத்துடன் தீபாவளி புத்தாடை வாங்க சென்ற பெண் விபத்தில் சிக்கி பலி.. கதறும் உறவினர்கள்.!



shocking-incident-woman-who-went-to-buy-diwali-clothes

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த கடலங்குடி பகுதியில் வசித்து வருபவர்கள் முத்துகிருஷ்ணன் - சுகந்தி தம்பதியினர். இவர்களுக்கு 9 வயதில் சுகுணா என்ற பெண் குழந்தையும் 8 வயதில் முத்தழகன் என்று ஆண் குழந்தை மற்றும் 8 மாதத்தில் முகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோயில் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

accident

அப்போது அவர்கள் உயர் மட்ட பாலத்தில் வந்தபோது இரண்டு சாலைகள் இணைக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனமானது இறங்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி முத்துகிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுகந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பிய நிலையில் சுகந்தி கையில் வைத்திருந்து 8 மாத குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.