ஷாக்.. இங்கே வா சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று கூறிய முதியவர்.. அழுது கொண்டே ஓடிய சிறுமி.. இதுதான் காரணமா..!

ஷாக்.. இங்கே வா சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று கூறிய முதியவர்.. அழுது கொண்டே ஓடிய சிறுமி.. இதுதான் காரணமா..!



Shock.. the old man who said he will come here and buy chocolates.. the little girl who ran away crying.. is this the reason..!

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் 70 வயது நிரம்பிய பெரியசாமி. இவர் கிராம உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி வசிக்கும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பெரியசாமி அழைத்துள்ளார்.

இதனை நம்பி அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பெரியசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமி அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறியுள்ளார்.

Sexual Harrasment

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பெரியசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.