சிறுமி உட்பட 2 இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு... 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோவில் கைது.!



shock-in-chennai-11-people-including-3-boys-arrested-in

சென்னையில் இரண்டு இளம் பெண்கள் மற்றும் சிறுமி உட்பட 3 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது உறவினரான 17 வயது சிறுமி இருவரும் தங்களது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதியை சிறுமி மட்டும் நள்ளிரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பியதால் அவரது சித்தப்பா கண்டித்திருக்கிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

tamilnadu

காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்த போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் தன்னை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என்றும் இதனால் பாலியல் வன்புணர்வு ஒத்துழைப்புடன் நடைபெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது  சிறுமியும் அவரது இரண்டு உறவுக்கார இளம் பெண்களும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த போது 15-க்கும் மேற்பட்டோர்  அவர்களை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற ஜூன் 30-ம் தேதி அன்று இரண்டு இளம் பெண்களும் வராத நிலையில் நள்ளிரவு சிறுமி மட்டும் வீடு திரும்பியதால் அவரது சித்தப்பாவிற்கு பயந்து பொய் கூறி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமிகள் கொடுத்த தகவலின் பெயரில் 18-22 வயதுடைய எட்டி இளைஞர்களையும் 15-17 வயதுடைய 3 சிறுவர்களையும் கைது செய்திருக்கிறது. மேலும் அவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களும் நான்கு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 19 வயது கல்லூரி மாணவரை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.