மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்.! பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.!

மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்.! பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.!


shivakumar family given corona relief fund

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் கொரோனா நிதியுதவி வழங்கினர்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியையும் வழங்கி வருகிறது. தற்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

இந்தநிலையில், நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்குவழக்குகள் வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இந்த ஒரு கோடி ரூபாய் நிதியை அளித்தனர்.