கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி திறப்பது குறித்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி திறப்பது குறித்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு..!



School management announcement regarding the opening of Kallakurichi Private School..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி இன்னும் பத்து நாட்களுக்குள் திறக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கின. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீ மதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17-ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகள் மற்றும் வகுப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததால், மீண்டும் பள்ளியைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் பள்ளியைத் திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியில் படிக்கும்  3,478 மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

சேதமடைந்த வகுப்பறைகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள், கரும்பலகைகள் என அனைத்தும் சரி செய்யப்பட்டு, இன்னும் பத்து நாட்களுக்குள் பள்ளி திறக்கப்படும் என்று சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.