சினிமா பாணியில் கனவு.. பள்ளி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

சினிமா பாணியில் கனவு.. பள்ளி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!



School girl suicide for cinema dreams

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. கணவரை பிரிந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி ஜனனி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கே அனுப்பி வைத்தனர்.

Dreams

இதனிடையே மாணவியின் அறையில் சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், மாணவி ஜனனி எழுதியதாவது, எனக்கு இப்போதெல்லாம் 3 படத்தில் வருவது போல கனவு வருது. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.