தமிழக பள்ளிகளுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை; மாணவர்கள் மகிழ்ச்சி.!

தமிழக பள்ளிகளுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை; மாணவர்கள் மகிழ்ச்சி.!



school-education---tamilnadu-gvt-new-announcement

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வகையான பள்ளிகளின் உயர் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நிறைவு பெற்றுள்ளது. கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் சில தேர்வுகள் முடிந்து உள்ளது. இன்னும் ஒரு சில தேர்வுகள் மீதம் உள்ளதால் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளை ஆண்டு இறுதித் தேர்வில் பெயில் ஆக்க கூடாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை மீறி மாணவர்களை பெயில் ஆக்கினாள் அந்த பள்ளி தலைமையாசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், 8ஆம் வகுப்பு வரை குழந்தைகளை பெயில் ஆக்கக் கூடாது என்ற சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர விரும்பும் திருத்தத்தை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.