சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பள்ளி வேன் , பரிதாபமாக பலியான உயிர் .!

சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பள்ளி வேன் , பரிதாபமாக பலியான உயிர் .!


school bus accident in rasiyapuram

பள்ளி வேன் விபத்தில் சிக்கி கிளீனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் ராசி இன்டர்நே‌ஷனல் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேன் சென்றது. வேனை பெரியசாமி ஓட்டிச் சென்றார். இதில் கிளீனராக சதீஷ்குமார் என்பவர் இருந்துள்ளார்.

இந்த வேன் இன்று காலை 34 பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக் கணவாய் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது.

உடனே வேனில் இருந்த மாணவ - மாணவிகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  மாணவ - மாணவிகளை பத்திரமாக வெளியே மீட்டு கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் கிளீனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மகரிஷி, ஹேமரஞ்சினி, ஹர்சினி ஆகிய 3 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ராசிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.