#Breaking || கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

#Breaking || கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!


School and college leave for heavy rain

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காடு, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

heavy rainfall

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.