நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.!! சசிகலா வெளியிட்ட உருக்கமான அறிக்கை.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.!! சசிகலா வெளியிட்ட உருக்கமான அறிக்கை.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா இல்லாத அதிமுகவும், கருணாநிதி இல்லாத திமுகவும் மற்றும் பல புதிய கட்சிகளும் போட்டியிட உள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதனையடுத்து பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த 24- ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையடுத்து தி நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அன்றையதினம், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், அரசியலை விட்டே தாம் ஒதுங்குவதாக சசிகலா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.