BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மனைவியை விபசாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்திய 23 வயது கணவன்; சேலத்தில் பகீர் சம்பவம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வன் (வயது 23). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கணவன் - மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வனின் மனைவியுடைய செல்போனில் ஆபாச படங்கள் இருந்துள்ளன. இதனை எதிர்பாராத விதமாக கண்டுகொண்ட உறவினர்கள், பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.
கண்ணீருடன் வெளிவந்த அதிர்ச்சி உண்மை
அச்சமயம் கணவர் தன்னை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கண்ணீருடன் அதிர்ச்சி புகார் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கள்ளக்காதலியுடன் ஜாலி டூர்; தில்லாலங்கடி கேடியின் பகீர் வாக்குமூலம்.!
புகாரை ஏற்ற ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், உண்மை அம்பலமானதை தொடர்ந்து தமிழ்செல்வனை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நம்ம தமிழ்நாட்டில்.., ஏலியனுக்கு கோவில் கட்டி, மணியடித்து பூஜை செய்து வழிபாடு.!