ரோட்டு கடையில் மது போதையில் தகராறு.. 3 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ரோட்டு கடையில் மது போதையில் தகராறு.. 3 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!



Road side fight hot water attack boy

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் அதே பகுதியில் உள்ள நடைபாதையில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான வசந்த் என்பவர் குடிபோதையில் வந்து தோசை கேட்டுள்ளார்.

chennai

அப்போது அண்ணாதுரை தோசை சுட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே அங்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் வசந்த் அகராதி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாதுரையும் அவரது மனைவியும் வசந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்த டிபன் கடையில் இருந்த இட்லி பாத்திரத்தை எப்படி உடைத்ததில், அருகில் நின்று கொண்டிருந்த அண்ணாதுரையின் 3 வயது பேரன் மீது இட்லி பானையில் இருந்த வெந்நீர் பட்டு உடல் வெந்து போனது.

chennai

இதனையடுத்து சிறுவனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 20% தீக்காயுடன் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.