இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு... கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு... கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!!



Road accident one young women died

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர் தனது தாயுடன் இன்று ஓசூரிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக ஆந்திராவிலிருந்து வந்த கார் கவிதாவின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

Road accident

இதில் கவிதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் லோகம்மாள் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.