பெண்களின் உள்ளாடையை திருடி, சுவர் ஓவியத்தை பார்த்து சுய இன்பம்.. பாழடைந்த கட்டிடத்தில் சைக்கோ பகீர் செயல்..!

பெண்களின் உள்ளாடையை திருடி, சுவர் ஓவியத்தை பார்த்து சுய இன்பம்.. பாழடைந்த கட்டிடத்தில் சைக்கோ பகீர் செயல்..!


Ramanathapuram Paramakudi Physio Man Robber Ladies Innerwear and Hand job useless Building

நள்ளிரவு நேரத்தில் பெண்களின் உள்ளாடையை திருடி செல்லும் சைக்கோ, பாழடைந்த கட்டிடத்தில் சுய இன்பம் செய்யும் பகீர் சம்பவம் தெரியவந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பகத் சிங் சாலை பகுதியில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதே பகுதியில் பல வருடமாக பயன்படுத்தப்படாத பாழடைந்த கட்டிடமும் உள்ளது. இந்நிலையில், குடியிருப்பு வளாகத்தில் உலா வரும் சைக்கோ, கொடியில் காய வைக்கப்பட்டுள்ள பெண்களின் உள்ளாடையை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இதனை கவனித்த குடியிருப்பு வாசிகள் சைக்கோ இளைஞனை பின்தொடர முடிவு செய்துள்ளனர். அவ்வாறு சைக்கோவை பின்தொடருகையில், இளைஞர் பெண்களின் உள்ளாடையை பாழடைந்த கட்டிடத்தில் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. திருடி செல்லும் பெண்களின் உள்ளாடையை வைத்து உல்லாசமாக இருக்கும் இளைஞர், கட்டிடத்தின் சுவரில் பெண்களின் ஓவியத்தை வரைந்து சுய இன்பம் செய்து வந்துள்ளார். 

ramanathapuram

மேலும், ஒரு சமயத்தில் குறிப்பிட்ட உள்ளாடை அவருக்கு வேண்டாம் என்று தோன்றினால், அதனை எரித்து மீண்டும் புதிய உள்ளாடையை திருட தொடங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இரவு வேளைகளில் பெண்கள் தனியே வந்தால், அவர்களின் முன்னிலையில் ஆடையை கழற்றி நிர்வாணமாகி உல்லாசமாக இருக்க அழைப்பு விடுத்தது பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். 

காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தாலும், அதனை அதிகாரிகள் கண்டுகொவதில்லை என்றும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.