டிராக்டருக்கு வழிவிட்டு தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; இராமநாதபுரத்தில் 20 பயணிகள் காயம்.!



Ramanathapuram Bus Accident 20 Injured 


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி பகுதியில், நண்பகல் வேளையில் அரசுப்பேருந்து ஒன்று பயணம் செய்தது. 

பேருந்தில் 20 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இந்நிலையில், சாலையில் டிராக்டருக்கு வழிகொடுக்கும் முயற்சியின்போது வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

20 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி:

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகளும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக உள்ளூர் மக்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.