மனைவியின் கள்ளக்காதலால் பெரும் துயரத்தில் வாடும் விஜய்க்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்.!

மனைவியின் கள்ளக்காதலால் பெரும் துயரத்தில் வாடும் விஜய்க்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்.!



rajini meet abirami husband vijay

கள்ளக்காதலனுடன் வாழ தன்  இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் சுந்தரம்  என்பவருடன் நீண்டநாட்களாக கள்ளக்காதல் கொண்டுள்ளார்.மேலும்  அவருடன் வாழ தன் இரு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து  கொடுத்து கொலை செய்தார்.

rajini

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் பதற  வைத்துள்ளது .

இவ்வாறு மனைவியின் துரோகத்தாலும்,தன் இரு பிஞ்சு  பிள்ளைகளையும் இழந்து அபிராமியின் கணவர் விஜய் பெரும் துயரத்தில்அவதிப்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் விஜய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர் என்று சமூகவலைதளங்களில் வெளியானது.

rajini

இதனை அறிந்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அபிராமியின் கணவன் விஜய்யைத் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பின் அவரது அழைப்பை ஏற்று போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினியை விஜய் சந்தித்தார்.அங்கு மீளா துயரத்தில் வாடிவரும் விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது .