அடுத்த 2 நாட்களுக்கு பொளந்துகட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

அடுத்த 2 நாட்களுக்கு பொளந்துகட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rainalert for next 2 days

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிககனமழையும், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rainalert

4-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.