26 மாவட்டங்களில் அடித்துநொறுக்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

26 மாவட்டங்களில் அடித்துநொறுக்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rainalert for 26 districts

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "21ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காடு, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணிநேரத்‌திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

26 districts

மீனவர்களுக்காக எச்சரிக்கையாக, 21ஆம் தேதியான இன்று தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்‌திய கிழக்கு வங்கக்கடல்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌".