சென்னையில் தீடீரென கொட்டித்தீர்த்த கனமழை.! வாகன ஓட்டிகள் கடும் அவதி.!

சென்னையில் தீடீரென கொட்டித்தீர்த்த கனமழை.! வாகன ஓட்டிகள் கடும் அவதி.!



rain in chennai

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர் , தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேடவாக்கம், வேளச்சேரி, அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆழ்வார்ப்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

rain

சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு சென்ற பணியாளர்கள் வீடுதிரும்புவதற்கு தாமதமானது. சென்னையின் பல பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள்  கடும் அவதிக்குள்ளாகினர்.