சற்று நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை.! 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!

சற்று நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை.! 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!



rain-in-10-district

ற்று நேரத்தில், தமிழகத்தை சேர்ந்த10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திருப்பத்தூர், சேலம், தர்மபுரி,  ராணிப்பேட்டை, செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பத்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.